ஆன்மிகம்
தூய பவுல்

தூய பவுல் ஆலய அசன பண்டிகை இன்று நடக்கிறது

Published On 2020-01-25 03:11 GMT   |   Update On 2020-01-25 03:11 GMT
நெல்லை திருமண்டலம் ஜவகர் நகர் சேகரத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ. ‘ஏ’. காலனி தூய பவுல் ஆலயத்தில் 46-வது பிரதிஷ்டை, அசன பண்டிகை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
நெல்லை திருமண்டலம் ஜவகர் நகர் சேகரத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ. ‘ஏ’. காலனி தூய பவுல் ஆலயத்தில் 46-வது பிரதிஷ்டை, அசன பண்டிகை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை சேகர தலைமை குரு ஸ்டீபன் நடத்துகிறார்.

உதவி குரு ஜோஸ் ஜேக்கப் வேதபாடம் வாசிக்கிறார். ஜேசன் ஜெபம் செய்கிறார். இதையடுத்து திருவிருந்து நடக்கிறது. மாலை 5 மணிக்கு அசன பண்டிகை ஆயத்த ஜெபமும், மாலை 6 மணிக்கு அசனமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News