ஆன்மிகம்

புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2019-04-20 03:34 GMT   |   Update On 2019-04-20 03:34 GMT
புனித வெள்ளியையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இயேசுவை சிலுவை அறைந்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைவதற்கு 40 நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடை பிடித்து வருகிறார்கள். இந்த தவக்கால உபவாச நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள். தவகால உபவாச நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். யார் மீதும் கோபப்படாமல் அன்பு காட்டுவார்கள். தவக்காலத்தின் போது தான் குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன் போன்ற விசேஷ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தில் புனித வெள்ளி முக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூரில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.

திருப்பூர் பங்களா பஸ்நிறுத்தம் அருகே உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது, இதை ஆயர் வில்சன்குமார் நடத்தி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயத்தில் ஆயர் அசோக்குமார் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதே போல் குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் திரளானவர் கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News