கிரிக்கெட்

அரைஇறுதியில் இந்தியாவுடன் மோதுவது கடும் சவாலாக இருக்கும்: கேன் வில்லியம்சன்

Published On 2023-11-10 05:19 GMT   |   Update On 2023-11-10 05:19 GMT
  • இலங்கைக்கு எதிராக 172 ரன் இலக்கை 23.2 ஓவரில் சேஸிங் செய்ததால் நல்ல ரன்ரேட்.
  • பாகிஸ்தான் இங்கிலாந்தை 273 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுவது உறுதியாகிவிட்டது.

15-ந்தேதி நடைபெறும் முதல் அரைஇறுதியில் இந்தியாவுடன் மோதுவது நியூசிலாந்தா அல்லது பாகிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ரன்ரேட்டில் நல்ல நிலையில் உள்ள நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-

அரைஇறுதியில் விளையாடுவது சிறப்பானது. ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவது கடும் சவாலானதாக இருக்கும். அதை எதிர்நோக்கி இருக்கிறோம்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆடுகளத்தில் பந்து மெதுவாக சென்றது. ரன் சேஸிங்கில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதிக்கு முன்னேற முடியும். இது மிகவும் கடினம் என்பதால், நியூசிலாந்து ஏறக்குறைய அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Tags:    

Similar News