கிரிக்கெட்
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி கேப்பிட்டல்சை 105 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்
- டெல்லி அணி துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
- அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
துவக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். ஜெமிமா 25 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் நிலைக்கவில்லை. இதனால் 18 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் சாய்கா இஷாக், இசி வாங், ஹெய்லி மேத்யுஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.