கிரிக்கெட்

கண்டத்தில் இருந்து தப்பித்தேன் - விபத்து குறித்து மேக்ஸ்வெல் கருத்து

Published On 2022-12-27 11:52 GMT   |   Update On 2022-12-27 11:52 GMT
  • சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன்.
  • வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.

மும்பை:

ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான தகவலால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதிலேயே ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இதில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத தொகையில் வீரர்கள் ஏலம் கேட்கப்பட்டனர். இதில் ஆர்சிபி அணி பல சுவரஸ்யமான ஏலங்களை எடுத்த போதும், அதிரடி நாயகன் க்ளென் மேக்ஸ்வெல் பங்கேற்பாரா என்ற குழப்பத்திலேயே இருந்து வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது. இதன் பிறகு தனது சொந்த ஊருக்கு சென்ற மேக்ஸ்வெல் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, விளையாட்டுத்தனமாக செயல்பட்டு கீழே விழுந்தார். அவரின் கால் மீது அவரின் நண்பர் ஒருவரும் விழுந்துவிட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு உடையும் அளவிற்கு சென்றது.

இந்நிலையில் இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியதாவது:-

சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன். எனினும் கண்டத்தில் இருந்து தப்பி, காயத்துடன் தப்பித்தேன். வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.


காலில் இருந்த வலிகள் குறைந்து ஓரளவிற்கு நடந்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக குணமடைந்து நடக்க தொடங்குவேன். எனது மனைவி வினி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவரின் உதவியால் நான் மீண்டு வருவேன் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். மேக்ஸ்வெல்லின் காயம் சற்று தீவிரமாக இருப்பதால், அவர் பழையபடி முழு உடற்தகுதியை பெறுவதற்கு இன்னும் 3 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல்-ல் விளையாடுவாரா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News