கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்

டி.என்.பி.எல்.கிரிக்கெட்- சஞ்சய் யாதவ் அதிரடியால் 209 ரன்கள் குவித்தது நெல்லை ராயல் கிங்ஸ்

Published On 2022-07-05 15:42 GMT   |   Update On 2022-07-05 17:34 GMT
  • டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • சஞ்சய் யாதவ் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார். இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார்.

இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி விளையாட உள்ளது.

Tags:    

Similar News