கிரிக்கெட்

டிஎன்பிஎல்- நெல்லை அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On 2022-06-30 13:55 GMT   |   Update On 2022-06-30 13:55 GMT
  • விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார்.
  • திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை பந்துவீச்சாளர் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

திண்டுக்கல்:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில், துவக்க வீரர்களான விஷால் வைத்யா, கேப்டன் ஹரி நிஷாந்த் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துவக்க ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மணி பாரதி (1), ராஜேந்திரன் விவேக் (12), மோகித் ஹரிஹரன் (3) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

மோனீஸ் 10 ரன்களும் (நாட் அவுட்), பிரதீப் 14 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். அதிசயராஜ் டேவிட்சன், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. 

Tags:    

Similar News