கிரிக்கெட்

ரிஷப்பண்ட் 2 வாரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்

Published On 2023-01-19 08:33 GMT   |   Update On 2023-01-19 08:33 GMT
  • காயம் அடைந்த தசைதார்கள் இயற்கையாக குணமாகுகிறாதா? என்று டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
  • அவர் மீண்டும் விளையாட 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 10 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ரிஷப்பண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

காயம் அடைந்த தசைதார்கள் இயற்கையாக குணமாகுகிறாதா? என்று டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். மேலும் அவர் மீண்டும் விளையாட 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News