கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நாளை 4-வது டி20 போட்டி: விளையாடுவாரா ரோகித் சர்மா?

Published On 2022-08-05 04:30 GMT   |   Update On 2022-08-05 04:30 GMT
  • இந்த தொடரில் சொதப்பி வரும் ஆவேஷ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம்.
  • ஹர்சல் படேல், குல்தீப் யாதவுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம்.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது, 5-வது டி20 போட்டி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு சென்றடைந்தனர். 4-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

3-வது டி20 போட்டியில் காயமடைந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்து விட்டதாகவும் 4-வது டி20 போட்டியில் அவர் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் 3 போட்டிகளில் அணியில் இடம் பிடிக்காத ஹர்சல் படேல், குல்தீப் யாதவுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் சொதப்பி வரும் ஆவேஷ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம். கடந்த ஐந்து டி20 போட்டிகளில் அவர் டெத் ஓவர்களில் 5.2 ஓவர்களில் 17.4 என்ற எகானமி ரேட்டில் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News