ஒரு பக்கம் பார்த்த மழை.. இன்னொரு பக்கம் பார்த்த விக்கெட் மழை- தத்தளிக்கும் தென் ஆப்பிரிக்கா
- மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களுடன் விளையாடி வருகிறது.
கொல்கத்தா:
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் பவுமா ஆகியோர் களமிறங்கினர். பவுமா முதல் ஓவரிலேயே 0 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென்- டிகாக் பொறுமையாக விளையாடினர்.
14 பந்துகள் சந்தித்த டிகாக் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 10 ரன்னிலும் பொறுமையாக விளையாடிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
11.5 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களுடன் விளையாடி வருகிறது. மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.