கிரிக்கெட்

சிட்னி டெஸ்டில் ஹேசில்வுட் அசத்தல்: 3ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 68/7

Published On 2024-01-05 09:32 GMT   |   Update On 2024-01-05 09:32 GMT
  • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
  • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிட்னி:

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்னும், ஆமிர் ஜமால் 82 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. லபுசேன் 60 ரன்னும், மிட்செல் மார்ஷ் 54 ரன்னும் எடுத்து வெளியேறினர். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர்.

பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால் 6 விக்கெட்டும், அகா சல்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

14 ரன்கள் முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். அயூப் 33 ரன்னும், பாபர் அசாம் 23 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் எஞ்சியுள்ள 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கைப்பற்றி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News