கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான ஆட்டம்- டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சு தேர்வு
- வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
- வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.
இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று 38வது போட்டி நடைபெறுகிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இதன்மூலம், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.