கிரிக்கெட் (Cricket)

பும்ரா

5வது டெஸ்ட் - இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்

Published On 2022-07-06 00:20 IST   |   Update On 2022-07-06 00:20:00 IST
  • 5-வது டெஸ்டில் மெதுவாக ஓவர் வீசியதால் இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
  • மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

பர்மிங்காம்:

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது.

கடைசி நாளான நேற்று, 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்தி இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்திய அணி இழக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News