கிரிக்கெட் (Cricket)
null

2-வது அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் தெரியுமா?

Published On 2023-11-16 17:28 IST   |   Update On 2023-11-16 17:30:00 IST
  • முதல் அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
  • 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

இந்நிலையில் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாடும்.

இந்நிலையில் இன்று மழை குறுக்கீட்டால் நாளை ரிசர்வ் டே அறிவிக்கப்படும். ஒருவேளை நாளை முழுவதும் மழை பெய்தால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

ஐசிசி விதிப்படி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Tags:    

Similar News