கிரிக்கெட்
2024 மகளிர் பிரீமியர் லீக்: ஏலம் எப்போது தெரியுமா?
- மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
- இத்தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றது.
மும்பை:
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக நடத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் விளையாடியது.
ஐ.பி.எல். போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் மும்பையில் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.