கிரிக்கெட்

ஆசிப் அலிக்கு தடை விதிக்க வேண்டும்- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகி வலியுறுத்தல்

Published On 2022-09-08 09:29 GMT   |   Update On 2022-09-08 09:29 GMT
  • ஆசிப் அலியின் செயல் முட்டாள் தனமானது.
  • எஞ்சிய போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும்.

ஷார்ஜா:

ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் வெளி யேறியது.

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியும், ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் பரீத் அகமதுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதி கொண்டனர்.

19-வது ஓவரில் ஆசிப் அலி அவரது பந்தில் 'சிக்சர்' அடித்தார். இதனால் அவர் பரீத் அகமதுவை சீண்டினார். அதற்கு அடுத்த பந்தில் ஆசிப் அலி அவுட் ஆனதால் அவரை பரீத் அகமது சீண்டினார். விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் பரீத் அகமது ஆவேசமாக கத்தினார்.

அப்போது அவருக்கும், ஆசிப் அலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடிப்பது போன்ற நிலை உருவானது. பிரீத் அகமதுவை தனது பேட்டால் ஓங்கி அடிக்கும் வகையில் ஆசிப் அலி மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள், சக வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிப் அலிக்கு எஞ்சிய ஆசிய கோப்பை போட்டியில் தடை விதிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைமை நிர்வாகி ஷபிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, ஆசிப் அலியின் செயல் முட்டாள் தனமானது. எஞ்சிய போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்க வேண்டும். பந்து வீச்சாளருக்கு விக்கெட் கைப்பற்றியதை கொண்டாட உரிமை உண்டு. உடல் ரீதியான செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார். 

Tags:    

Similar News