கிரிக்கெட்

(கோப்பு படம்)

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி- இந்தியா முதலில் பேட்டிங்

Published On 2022-10-02 13:36 GMT   |   Update On 2022-10-02 15:24 GMT
  • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
  • முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கவுகாத்தி:

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

Similar News