நரேந்திர மோடி மைதானம் எங்களது Home Ground... தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர்
- நரேந்திர மோடி மைதானத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்குத் தெரியும்.
- மீண்டும் இறுதிப்போட்டிக்காக இங்கு திரும்புவோம்.
டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும் 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
முதல் அரையிறுதி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த மைதானம் எங்களது ஹோம் மைதானம் என தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கன்ராட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த உலகக்கோப்பையில் எங்களது பெரும்பாலான போட்டிகளை (7-இல் 5 போட்டிகள்) அகமதாபாத்தில் விளையாடியதால், அந்த மைதானம் எங்களுக்கு ஒரு "சொந்த மைதானம்" (Home Ground) போன்ற உணர்வைத் தருகிறது. இந்த மைதானத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்குத் தெரியும்.
அகமதாபாத் மைதானத்தின் சூழல் தங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகவும், மீண்டும் இறுதிப்போட்டிக்காக இங்கு திரும்புவோம்.
என ஷுக்ரி கன்ராட் கூறியுள்ளார்.
இறுதிப் போட்டியும் அதே மைதானத்தில்தான் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.