ஜும் இன்எஸ்.பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இதில் நாயகனாக தூயவன், நாயகியாக சவுந்தர்யாராய் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் பூவிதா, யுவராணி, நெல்லை சிவா, அலெக்ஸ், வீட்டு ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- நேமம் வி.சிவானந்தம், டி.மகிபாலன், இசை-சரண் பிரகாஷ், எடிட்டிங்- ஆர்.டி. அண்ணாதுரை, ஸ்டண்ட்- தவசிராஜ், நடனம்-பவர்சிவா, பாடல்கள்- புலவர் அன்பழகன், தயாரிப்பு -டி.ஏ. ஜவகர் தாசன், இயக்கம்- திரைப்பட கல்லூரி மாணவர் டி.ஏ.வினோபா. படம் பற்றி கூறிய இயக்குனர்....
“மது பழக்கத்திற்கு அடிமையான ஒருவனால் குடும்ப வாழ்க்கையே திசைமாறி செல்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சமுதாய புரட்சியை தோற்றுவிக்கிறாள். இதன் விளைவுகளை பின்னணியாகக் கொண்டு ஜனரஞ்சகமாக உருவாக்கப்படும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இது உண்மை சம்பவத்தை மையக்கருவாக கொண்டு உருவாகிறது” என்றார்.
புலவர் ச.அன்பழகன் எழுத்தில் கானாபாலா பாடிய ‘அக்கக்கா...அக்கக்கா, உன் அப்பாட்மண்டு எங்கக்கா’ என தொடங்கும் கிளு கிளுப்பான பாடல் ‘கருவேலம் பூக்கள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. ஏலகிரி, பகுதியில் சமீபத்தில் இந்த பாடல் காட்சி படமானது. 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று ஆடிப் பாடுவதாக இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது.