சினிமா

நெஞ்சில் துணிவிருந்தால்

Published On 2017-10-15 11:11 GMT   |   Update On 2017-10-15 11:11 GMT
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை-டி.இமான், ஒளிப் பதிவு- ஜே.லக்ஷ்மன், எடிட்டிங்-மு.காசிவிஸ்வ நாதன், பாடல்கள்-வைரமுத்து, மதன்கார்க்கி, யுகபாரதி, கலை-பி.சேகர், ஸ்டண்ட்-அன்பறிவ், நடனம்-ஷோபி பால்ராஜ், தயாரிப்பு-ஆண்டனி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-சுசீந்திரன்.

“துணிவுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்ற கருவை மையமாக வைத்து இந்த கதை பின்னப்பட்டுள்ளது. காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கதையாக இது உருவாகி இருக்கிறது. விக்ராந்த் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நிச்சயம் ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News