சினிமா

மாட்டுக்கு நான் அடிமை

Published On 2017-08-25 07:40 GMT   |   Update On 2017-08-25 07:40 GMT
இளையகுமார் பி.கே இயக்கத்தில் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவில் ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் அறிமுகம் ஆகி இருப்பவர் சாம்பார் ராசன்.

இவர் தயாரித்து நடிக்கும் படம் ‘மாட்டுக்கு நான் அடிமை’. இது மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை. அந்த கேரக்டரில் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இரண்டு நாயகிகள். அதில் கோலிசோடா சீதா ஒருவர். இன்னொரு நாயகி பெயர் சவுந்தர்யா. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தை இளையகுமார் பி.கே என்பவர் இயக்கியுள்ளார். இது பற்றி கூறிய அவர்...

“இந்தபடம் நம்ம நாட்டுல மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.



இந்த படத்தை தயாரித்து நடித்துள்ள நாயகன் சாம்பார் ராசன், “தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே. எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பதற்காக எனது பெயரை ‘சாம்பார் ராசன்’ என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிந்துவிட்டேன். எனது பூர்விகம் கோவை.

படத்தில் ஜல்லிக்கட்டு வச்சிருக்கேன். நான் இந்த படத்தில் மாட்டு விஞ்ஞானி. எனவே ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன்” என்றார்.

Tags:    

Similar News