சினிமா

கூட்டத்தில் ஒருத்தன்

Published On 2017-07-22 09:16 GMT   |   Update On 2017-07-22 09:16 GMT
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் - ப்ரியா ஆந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் முன்னோட்டம்.
டிரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. இதில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த், நாசர், சமுத்திரக்கனி, பால சரவணன், ஜான் விஜய், ரமா, சஞ்சை பாரதி, மாரிமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - பி.கே.வர்மா, இசை - நிவாஸ் கே.பிரசன்னா, பாடல்கள் - கபிலன், எடிட்டிங் - லியோ ஜான்பால், கதை - கே.கதிர், ஸ்டண்ட் - அன்பறிவ், நடனம் - ஷெரீப், சதீஷ், தயாரிப்பு - எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, ரமானியம் டாக்கீஸ், கதை, திரைக்கதை, இயக்கம்- டி.ஜே.ஞானவேல்.

படம் பற்றி கூறிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. “இந்த படம் இது வரை யாரும் பேசாத மிடில் பெஞ்ச்சர்ஸ் வர்க்கத்தைப் பற்றி பேசும் படம். அனைவரும் ரசிக்கும் படம்” என்றார்.



நாயகன் அசோக் செல்வன், “நானும் ஒரு மிடில் பெஞ்சர்தான் இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் இது ஒரு பாசிட்டிவான படமாக இருக்கும். எல்லோருடைய மனதிலும் நல்லெண்ணத்தை விதைக்கும் படம் இது” என்று தெரிவித்தார்.

நாயகி பிரியா ஆனந்த், “படங்களில் இனி நடிக்ககூடாது என்ற எனது மனநிலையை மாற்றி, நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த கதை தூண்டியது” என்று கூறினார்.

இசை அமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா, “இது என் மனதுக்கு நெருக்கமான கதை. இதில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ‘ஏண்டா இப்படி’ பாடல் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதை இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்”
Tags:    

Similar News