சினிமா

நான் யாரென்று நீ சொல்

Published On 2017-07-15 07:15 GMT   |   Update On 2017-07-15 07:15 GMT
ஏ.எம்.பாஸ்கர் இயக்கத்தில் கீர்த்திதரன் - சுரேகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நான் யாரென்று நீ சொல்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரிக்கும் படம் ‘நான் யாரென்று நீ சொல்’.

இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். நாகேஷின் பேரனும் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சோனா, ஆனந்த்பாபு, பாண்டு, கராத்தேராஜா, மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

எடிட்டிங் - பிரேம், பாடல்கள் - இளையகம்பன், ஸ்டண்ட் - பம்மல் ரவி, இசை - ஜான் பீட்டர், ஒளிப்பதிவு - பாஸ்கர், நடனம் - ரவிதேவ், தயாரிப்பு - ஆர்.மணிமேகலை, எழுத்து, இயக்கம் - ஏ.எம்.பாஸ்கர். இவர் லட்சுமிராயை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.



“சோனாவின் மகள் சுதா ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் பேக்கரி தொழில் செய்யும் கீர்த்திதரன் இருவரும் அவளை காதலிக்க முயற்சிக்கிறார்கள். சோனா கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார் என்கிற கதை முடிச்சு தான் ‘நான் யாரென்று நீ சொல்’ படத்தின் திரைக்கதை. கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார்.

Tags:    

Similar News