சினிமா
கிசுகிசு

வயதாகி விட்டதை உணர்ந்த நடிகை

Published On 2020-11-13 06:09 GMT   |   Update On 2020-11-13 06:09 GMT
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கும் அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து விட்டாராம்.
அந்த ‘ரா’ நடிகை, திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தனக்கு வயதாகி விட்டதை அவர் உணர்ந்து விட்டாராம். அவரை முன்னணி நாயகன் ஒருவர், தனது புதிய படத்தில் நடிக்க அழைத்தாராம். அந்த படத்தில், கதாநாயகிக்கு சண்டை காட்சிகளும், ‘பைக் ரேஸ்’சும் இருக்கிறதாம்.

இதையறிந்த ‘ரா’, “எனக்கு வயதாகி விட்டது. சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது. நீங்க வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, அமைதியாக அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.
Tags:    

Similar News