சினிமா செய்திகள்

செல்வராகவன்

கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல.. கவலையில் செல்வராகவன்..

Published On 2022-12-31 14:11 IST   |   Update On 2022-12-31 14:11:00 IST
  • இயக்குனர் செல்வராகவன் புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
  • இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


செல்வராகவன்

மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு " கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல " என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


செல்வராகவன்

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இது போன்று பதிவுகளை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் கவலையை விடுங்கள் மகிழ்ச்சியான காலங்கள் திரும்ப வரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.




Tags:    

Similar News