சினிமா செய்திகள்

நிறத்தினால் நிராகரிக்கப்பட்டேன்- மனம் திறந்த பொன்னியின் செல்வன் நடிகை

Published On 2023-06-23 15:27 GMT   |   Update On 2023-06-23 15:27 GMT
  • பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிரபலமானவர் சோபிதா துலிபாலா.
  • இவர் தற்போது பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர் சோபிதா துலிபாலா. இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் அடிக்கடி காதல் வதந்திகளிலும் சிக்கி வருகிறார்.


இந்நிலையில், நடிகை சோபிதா துலிபாலா தான் அழகாக இல்லை என்று விமர்சித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "படங்களில் நடிப்பதற்கு முன்பு நான் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது நான் வெள்ளையாக இல்லை. அழகாக இல்லை என்று எனக்கு முன்பே கூறினார்கள். அதற்காக நான் சோர்வடையவில்லை. எனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரங்களிலும் என்னுடைய முழு திறமையையும் காண்பித்தேன். அந்த சிறிய கதாபாத்திரங்கள் தான் நிறைய கற்றுக் கொடுத்தன" என்று கூறினார்.

Tags:    

Similar News