சினிமா செய்திகள்

பார்த்திபன்

அப்படிப்பட்ட மனிதர் நினைத்ததை இவர் முடித்துள்ளார் - நடிகர் பார்த்திபன்

Published On 2022-10-04 07:04 GMT   |   Update On 2022-10-04 07:04 GMT
  • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.

 

பொன்னியின் செல்வன் - பார்த்திபன்

இந்நிலையில் இப்படத்தில் நடித்த பார்த்திபன் இயக்குனர் மணிரத்னம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டிராப்டு புரொஜெக்ட் (Dropped project) என்ற தலைப்பில் இன்று பார்த்தேன். உண்மையில் அவர் இந்தக் கனவுத் திட்டத்திற்காக (சினிமா) துறையில் ஒரு விதையை விதைத்தவர்! பொன்மனச் செம்மலின் பொன்னியின் செல்வன்' எண்ணங்களில் உயர்ந்தவர், என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.' நினைத்ததை முடிப்பவன்'-அவர் நினைத்ததை எல்லாம் அவர் நினைத்ததை எல்லாம் முடிப்பவர் சிஎம் (CM) உட்பட! அப்படிப்பட்ட மனிதர் நினைத்ததை மணிரத்னம் முடித்துள்ளார். விதைச்சது எம்ஜிஆர் விளைச்சது எம்ஆர். நமக்கது பெருமை! என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News