சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா - ஜோதிகா தம்பதி சாமி தரிசனம்

Published On 2025-08-04 09:04 IST   |   Update On 2025-08-04 09:04:00 IST
  • அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கமல் ஹாசன் பங்கேற்றார்.

நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

இந்நிலையில் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா முடிந்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா - ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News