சினிமா செய்திகள்

அனுமதியின்றி பண்ணை வீடு கட்டிய காமெடி நடிகருக்கு நோட்டீஸ்

Published On 2024-11-25 11:04 IST   |   Update On 2024-11-25 11:04:00 IST

திருப்பதி:

தெலுங்கு சினிமா காமெடி நடிகர் அலி. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள எக்மாமிடி கிராமத்தில் பண்ணை வீடு கட்டி வருகிறார்.

இந்த வீடு எந்தவித அனுமதி இன்றி கட்டப்படுவதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சார்பில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீஸ் கட்டிட பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கட்டுமானத்திற்கான அனுமதியை பெற வேண்டும். இதனை மீறினால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அலி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சேர்ந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் ராஜமுந்திரி அல்லது விஜயவாடாவில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு சீட் வழங்கப்பட வில்லை.

இந்த நிலையில் அவர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். விரைவில் அவர் ஜனசேனா கட்சியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News