சினிமா செய்திகள்

மம்முட்டிக்காக சபரிமலை சென்ற மோகன்லால்.. சர்ச்சையும், பின்னணியும்

Published On 2025-03-27 12:33 IST   |   Update On 2025-03-27 12:33:00 IST
  • சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.
  • நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.

நடிகரும், டைரக்டருமான பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

எம்புரான் படம் வெற்றி பெறவேண்டி சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் நடிகர் மம்முட்டியின் இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் சிறப்பு வழிபாடு நடத்திய ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதனையடுத்து மம்முட்டிக்காக மோகன்லால் வழிபடு நடத்தியது மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணம் என்று நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் பாராட்டினார்.

அதே சமயம் மம்முட்டி ஒரு முஸ்லிம் என்றும் இந்து முறைப்படி அவருக்கு பிரார்த்தனை செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கையை மீறுவதாகும் என்று மற்றொரு தரப்பினர் இதற்கு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர் அல்லாவிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மோகன்லாலிடம் மம்முட்டி கூறியிருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று 'மத்யமம்' செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரான அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News