Bigg Boss Season 9: இந்த வாரம் எவிக்ஷன் இல்லையாம்! - ரீ என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர் இவரா?
- பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதியராக கலந்து கொண்ட பிரஜினும் சாண்ட்ராவும் நாங்கள் தனித்தனி கண்டஸ்டண்ட் என்று சொல்லிக் கொண்டு ஒரே போட்டியை தான் விளையாடி வருகின்றனர். அதேபோன்று சாண்ட்ரா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன் வில்லத்தனத்தை எல்லாம் காண்பித்து வருகிறார். வீட்டினுள் சண்டையை மூட்டி விடுவது. பார்வதியுடன் சேர்ந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கனி வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அனால் கடைசி நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட ஆதிரை பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. FJ - வியானா காதல் ட்ராக்கில் ஆதிரையின் என்ட்ரி குழப்பத்தை ஏற்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக்கும் என்று கூறப்படுகிறது.