சினிமா செய்திகள்

என்னை பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே இலக்கு- மாளவிகா மோகனன்

Published On 2026-02-03 07:45 IST   |   Update On 2026-02-03 07:45:00 IST
  • கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும், ரசிகர்களும் தான்.
  • ஒவ்வொரு ஆடையையும் பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்கிறேன்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் மாளவிகா மோகனன் நடிப்பில் விரைவில் 'சர்தார்-2' படம் திரைக்கு வரவிருக்கிறது. கவர்ச்சி படங்களை அடிக்கடி களமிறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் மாளவிகா மோகனன், தற்போது எந்த விழாக்களில் கலந்துகொண்டாலும் கவர்ச்சி உடையிலேயே தரிசனம் தந்து அனைவரையும் விய(ர்)க்க வைத்து விடுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும், ரசிகர்களும் தான். அந்தவகையில் என் உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். என்னை பார்ப்போரின் கண்களை ஈர்ப்பதே இலக்கு. எனவே ஒவ்வொரு ஆடையையும் பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்கிறேன். என் உடைகளுக்கும், அழகுக்கும் வரும் ரசிகர்களின் 'கமெண்ட்'டுகளை ரசிக்கிறேன்'' என்கிறார்.

Tags:    

Similar News