சினிமா
லிங்குசாமி படத்தின் புதிய அறிவிப்பு
மூன்று வருடங்களுக்கு பின் லிங்குசாமி இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பையா’, ’அஞ்சான்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்பொத்திநேனி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இவர்கள் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.