சினிமா
கதாநாயகனாக களமிறங்கும் இயக்குனர் பிரபு சாலமனின் மகன்
ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் "டேய் தகப்பா" எனும் படத்தில் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் நாயகனாக நடிக்கிறார்.
தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் காடன் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாககிறார்.
ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் "டேய் தகப்பா" எனும் படத்தில் சஞ்சய் நாயகனாக நடிக்கிறார். கௌசிக் ஶ்ரீபுஹர் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
சஞ்சய் - ஆராத்யா
படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, பப்பு, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.