சினிமா
திரிஷா

கொரோனா பரவல் எதிரொலி.... நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு

Published On 2021-05-23 06:09 GMT   |   Update On 2021-05-23 06:09 GMT
நடிகை திரிஷா கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உள்ளன.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


திரிஷா

இந்த ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முனைப்பு காட்டினார்களாம். ஆனால் நடிகை திரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளாராம்.
Tags:    

Similar News