சினிமா
அஜித், அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள உணவுகளுடன் கூடிய தள்ளுவண்டி

‘பசித்தால் எடுத்துக்கொள்’ - ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் அஜித் ரசிகர்கள்

Published On 2021-05-21 11:00 IST   |   Update On 2021-05-21 11:00:00 IST
வீடில்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள், ‘பசித்தால் எடுத்துக்கொள்’ என்ற பதாகையுடன் கூடிய தள்ளுவண்டியில் சாப்பாடு, தண்ணீர் பாட்டில்கள், வாழைப்பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை நிரப்பி, தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்லும் விதமாக அந்தவண்டியை சாலையோரம் நிறுத்திவைத்துள்ளனர். 



குறிப்பாக வீடில்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Similar News