சினிமா
அருண்ராஜா காமராஜ், சிந்துஜா

கொரோனாவுக்கு மனைவி பலி.... மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அருண்ராஜா காமராஜ்

Published On 2021-05-17 06:59 GMT   |   Update On 2021-05-17 07:38 GMT
கொரோனாவுக்கு மனைவி பலியான நிலையில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாராம்.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று இரவு அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனைவி உயிரிழந்த நிலையில், அவரை கடைசியாக பார்க்க முடியாமல் இருக்கும் அருண்ராஜாவின் நிலையை நினைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் வடிக்கின்றனர்.
Tags:    

Similar News