சினிமா
ரீமா கல்லிங்கல்

10 ஆண்டுகளுக்கு பின் தமிழுக்கு வரும் பிரபல நடிகை

Published On 2021-05-10 15:59 GMT   |   Update On 2021-05-10 15:59 GMT
தமிழ் சினிமாவில் பரத்துடன் ஒரு படத்தில் நடித்த நடிகை, தற்போது 10 ஆண்டுகளுக்கு மீண்டும் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சாய் பல்லவியின் தங்கை இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு இயக்குனர் விஜய் கதை எழுதியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. 



ரீமா 2011 ஆம் ஆண்டில் ஜி.என்.ஆர் குமாரவேலனின் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘யுவன் யுவதி’ படத்தின் நடித்திருந்தார். தற்போது ஸ்டண்ட் சில்வா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் ரீமா 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.
Tags:    

Similar News