சினிமா
தர்ஷன்

பிக்பாஸ் தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Published On 2020-10-04 13:05 GMT   |   Update On 2020-10-04 13:05 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான, தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் தர்ஷன் மீது புகார் அளித்திருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்து விட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். 



இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News