சினிமா
சேச்சி அற்புதம்... மஞ்சு வாரியரை பாராட்டிய பிரபல நடிகை
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியரை சேச்சி அற்புதம் என்று பிரபல நடிகை பாராட்டியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன.
அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அவர் நடிப்பில், மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்த நினைத்த நடிகை மஞ்சு வாரியர், வீணை வாசிக்கக் கற்றுள்ளார்.
வீணையை வாசித்து அவர், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு, நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் வரை தோல்வி அடையவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு மலையாள நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ், ஆ, சேச்சி அற்புதம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஜெயசூர்யா, நடிகை பானு உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அவர் நடிப்பில், மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்த நினைத்த நடிகை மஞ்சு வாரியர், வீணை வாசிக்கக் கற்றுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், ஆ, சேச்சி அற்புதம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஜெயசூர்யா, நடிகை பானு உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.