சினிமா
சௌந்தர ராஜா

முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த சௌந்தர ராஜா

Published On 2020-05-06 16:22 GMT   |   Update On 2020-05-06 16:22 GMT
மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து சௌந்தர ராஜா முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா நோயினால் ஏறக்குறைய அணைத்து தரப்பு மக்களும் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர். மிகவும் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கின்றனர். இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது, மேலும் பல மக்களின் நிம்மதியையும் கெடுக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, மக்கள் நலன் கருதி இதை மறு பரிசீலனை செய்யுங்கள்.
Tags:    

Similar News