சினிமா
ராஷ்மிகா

ஊரடங்கு நேரத்தில் ராஷ்மிகா எடுத்த திடீர் முடிவு

Published On 2020-05-06 16:00 GMT   |   Update On 2020-05-06 16:00 GMT
ஊரடங்கு உத்தரவால் திரை உலகம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கிலும் எழுந்துள்ளது. இதில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் புஷ்பா படத்திற்காக சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான சம்பளம் பேசியுள்ளார்.

சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளதாம். இதனால் ஊரடங்கு முடிந்து நிலைமை சீரானபின் தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம் ராஷ்மிகா. 
Tags:    

Similar News