சினிமா
மீரா சோப்ரா

கத்திமுனையில் மீரா சோப்ரா தந்தையிடம் கொள்ளை

Published On 2020-05-06 17:47 IST   |   Update On 2020-05-06 17:47:00 IST
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த மிகவும் பிரபலமான மீரா சோப்ராவின் தந்தையிடம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையானவர் மீரா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். மீரா சோப்ரா தந்தையிடம் கொள்ளையடிக்கபட்டுள்ளது.

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் கூறும்போது, போலீஸ் காலனியில் என் தந்தை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது இரண்டு பேர் ஸ்கூட்டரில் வந்து கத்தியை காட்டி மிரட்டி அவரின் செல்போனை பறித்துச் சென்றனர் என்றார்.



மீரா அளித்த புகாரின்பேரில் போலீசார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள். இதை பார்த்த மீரா டெல்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டார். முதியவர்களை பாதுகாப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News