சினிமா
ஏ.ஆர்.ரகுமான்

அவர்கள் மரணம் துரதிர்ஷ்டவசமானது - ஏ.ஆர்.ரகுமான்

Published On 2020-05-06 11:39 GMT   |   Update On 2020-05-06 11:39 GMT
இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்களான இர்பான்கான் மற்றும் ரிஷிகபூர் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தனர். இதனால் பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இருவரின் இறுதிச்சடங்கில் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.



இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் கூட இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவருக்கும் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறியபோது, ‘இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News