சினிமா
விஜய்

மாஸ்டர் டப்பிங் அனுபவம் எப்படி இருந்தது? - ரவீனா ரவி விளக்கம்

Published On 2020-05-06 06:52 GMT   |   Update On 2020-05-06 12:58 GMT
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் பேசியுள்ள ரவீனா ரவி, அந்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா ரவி. இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங் கலைஞரான ரவீனா நயன்தாரா, காஜல் அகர்வால், அமலாபால், எமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு ரவீனா தான் டப்பிங் பேசியுள்ளார்.



மாஸ்டர் படத்தில் டப்பிங் பேசியபோது அதில் விஜய்யின் கதாபாத்திரத்தை கண்டு ஷாக் ஆனதாக கூறியுள்ளார். வழக்கமான விஜய் படம் போல் மாஸாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. சில காட்சிகளை பார்த்தபோது, விஜய் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கிட்டார்னு தெரியலையே என தோன்றியதாக ரவீனா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News