சினிமா
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோர் எண்ணிக்கை 3 மில்லியன் அதாவது 30 லட்சத்தை கடந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
''நிபந்தனையற்ற உங்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி. நீங்கள் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.