சினிமா
யாஷிகா ஆனந்த்

யாஷிகா கவர்ச்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Published On 2019-12-04 07:57 GMT   |   Update On 2019-12-04 07:57 GMT
நடிகை யாஷிகா ஆனந்த், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஓரிரு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 

சமூகவலைதளத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர், இதற்கு ரசிகர்களின் பதிவிடும் சில அநாகரீக கருத்துக்கள் தன்னை வருத்தமடைய செய்வதாக முன்பு கூறினார். 



அப்படியிருந்தும் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை நிறுத்தவில்லை. தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். 
Tags:    

Similar News