சினிமா

கிரேஸி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது

Published On 2019-06-11 06:09 GMT   |   Update On 2019-06-11 06:09 GMT
நேற்று காலமான வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகனின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்ச்சி காலை 9 மணியளவில் முடிவடைந்ததும், இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.




ஊர்வலம் காலை 11.00 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நிறைவடைந்ததும் அங்கு கிரேஸி மோகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News