கில்லி மாப்பிள்ளை- திரைவிமர்சனம்
- குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
காரைக்குடி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வருகிறார் நாயகன் கார்த்திக். அதே காவல் நிலையத்திற்கு புதிதாக கான்ஸ்டபிளாக வரும் நாயகி திவ்யா தாமசுக்கும், இவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மேலும் இருவரும் புரோமோசனுக்கு போட்டி போட்டு வருகிறார்கள்.
எலியும் பூனையுமாக சண்டை போட்டு வந்தாலும் இருவரும் உள்ளுக்குள் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் திவ்யா தாமசுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அந்த மாப்பிள்ளை மூலம் இருவரும் நிரந்தரமாக பிரிய நேரிடுகிறது. மேலும் திவ்யாவுக்கு எஸ்.ஐ.ஆக புரோமோஷனும் கிடைக்கிறது.
இறுதியில் கார்த்திக்கும், திவ்யா தாமசும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கார்த்திக், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடிப்பு தான் பொருந்தவில்லை. சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் திவ்யா தாமஸ், ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், விஜி சேகர், பெஞ்சமின், ராஜ்குமார், முத்துக்காளை, கிரேன் மனோகர், அம்பானி சங்கர், சஹானா, ஹேமா, சித்தா, தர்ஷன், காந்தராஜ், பிரேம பிரியா, கிளி ராமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மராஜா. பல நடிகர்களை நடிக்க வைத்து இருக்கிறார். ஆனால், அழுத்தமான காட்சிகள், காமெடி காட்சிகள் பெரியதாக எடுபட வில்லை. படத்தின் நீளம் குறைத்து, தேவையான காட்சிகளை நீக்கி இருந்தால் ரசித்து இருக்கலாம்.
இசை
குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.
ரேட்டிங்-1/5