சினிமா

நடிகருக்கான சிறப்பு விருது பெற்ற கேணி இயக்குனர் எம்.ஏ.நிஷாத்

Published On 2019-04-17 19:55 IST   |   Update On 2019-04-17 19:55:00 IST
கேணி படத்தை இயக்கிய இயக்குனர் எம்.ஏ.நிஷாத், தற்போது வாக்கு படத்தில் நடித்ததற்காக சிறப்பு விருதை பெற்றிருக்கிறார். #MANishad #Vaaku
தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான படம் "கேணி". இதில் பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகி இருந்த இந்தப்படத்தில் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குனர். 



எல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்-திற்கு, கேரள அரசு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவித்தது. 

தற்போது ‘வாக்கு’ படத்தில் நடித்ததற்காக கேரளா பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
Tags:    

Similar News